அரச உத்தியோகஸ்தர்களுக்கான பொது விடுமுறைகள் குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது.
இந்தநிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல் மற்றும் வேலை நாட்களை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கவனம் செலுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்மூலம் அரச சேவையை மேலும் செயல் திறன் மிக்கதாக மாற்றுவதுடன் அரச சேவையை பொதுமக்கள் தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.