வடக்கு ஆளுநரின் சட்டம் அதிரடியாக நீக்கம்!
வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தன்னிச்சையாக வர்த்தமானி மூலம் அறிவித்த விடயங்களை ரத்து செய்ய நட வடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவைப் பணித்தார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது.
வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்கள் என்ற பெயரில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகரஜாவால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
சர்ச்சை ஏற்படுத்திய டக்லஸ்
இந்நிலையில் அரசமைப்புக்கும் சட்டங்களுக்கும் முரணாக தனிநபர் ஒருவர் நியதி சட்டங் களை ஆக்கி அறிவிக்கும் விதத்தில் வடக்கு ஆளுநரால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இந்த விடயம் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவால் சுட்டிக்காட்டப்பட்ட போது, அந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் நடவடிக்கையை நீதி அமைச்சர்மூலம் மேற்கொள்ளலாம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
எனினும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச வெளிநாட்டில் இருந்ததால் அன்றைய தினம் அமைச்சர கூட்டத்திற்குப் அவர் பிரசன்னமாகவில்லை. இந்நிலையில் .நேற்று அமைச்சரவை கூடிய போது தேசிய போக்குவரத்துக் கொள்கை திட்டம் ஒன்று குறித்து அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதேசமயம் சில சேவைகளுக்கான உரிமங்கள் வழங்கும் – மாகாணத்துக்கு பகிரப்பட்ட- உரித்தை தேசிய கொள்கைத் திட்டம் மூலம் மத்திய அரசு பறிக்கும் முயற்சி இது என்று குறிப்பிட்டு, அதற்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்தத் திட்டத்தை டக்ளஸ் தேவானந்தா தடுத்து நிறுத்தினார்.
அச்சமயம் மாகாண சபையின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் ஆளுநர் சட்டமாக்கிய விடயத்தையும் அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டார்.
அதை அடுத்துக் குறுக்கிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த வர்த்தமானி உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவைப் பணித்துள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
You My Like This Video