நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநருக்கு ஏற்பட்ட நிலை
பங்களாதேஷில், கீராமின் வங்கி மோசடி வழக்கில் நோபல் பரிசு பெற்றவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.
வங்க தேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய பொருளாதார நிபுணரான முகமது யூனிஸ்,வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டமைக்காக 2006-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
கடந்த 1983-ம் ஆண்டு நிறுவிய மைக்ரோ கிரிடிட் கிராமிய வங்கியில் தொழிலாளர் சட்டத்தினை மீறியதாகவும், தொழிலாளர் நல நிதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முகமது யூனிஸ் உள்ளிட்ட மூன்று நிர்வாகிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டு 6 மாத கால சிறை தண்டனையும் 25000 டுாகா (கரன்சி) அபராதமும் விதித்து நீதிபதி ஷேக் மெரினா சுல்தானா தீர்பளித்துள்ளார்.