அரச சேவையில் இடமாற்றங்கள் கிடையாது! வெளியானது அறிவிப்பு
உள்ளூராட்சிசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனை ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் ,
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த காலப்பகுதியில் இடமாற்றங்கள் செய்யப்பட வேண்டுமாயின் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்து அதன் அனுமதியுடன் மட்டுமே இடமாற்றம் செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.
அதேசமயம் தேர்தல் தொடர்பில் சகல சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,
தேர்தல் முடியும் வரையில் இந்த சட்ட ஏற்பாடுகள் பின்பற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.