பொதுஜன பெரமுனவிற்குள் பிரச்சினையா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக எந்தப் பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க Prasanna Ranatunga தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (09-08-2023) உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, Mahinda Rajapaksa ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நீண்ட காலமாக உள்ளவர்.
மாகாணசபைகளின் முதல்வர்களை அமைச்சரவைக்குள் அழைத்து பேச்சு நடத்தியவர் தான் மஹிந்த. மேலும், 13 பிளஸ் தருவதாக அப்போதே அவர் கூறியிருந்தார்.
எனவே, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பொதுஜன பெரமுனவிற்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது.
சர்வக்கட்சி மாநாட்டின்போது, நாம் இந்த நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைப்போம்” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.