இரசாயன பொருட்கள் கடலில் கலந்திருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை! அரசாங்கம்
பேர்ள் கப்பல் விபத்தினால் இரசாயன பொருட்கள் கடலில் கலந்திருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லையெனவும், கிடைக்கபெற்றுள்ள மாதிரிகளை கொண்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்கம் சபையில் தெரிவித்ததுடன், கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இடைகால நஷ்ட ஈடாக கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை கடல் எல்லைக்குள் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் சரக்கு கப்பலினால் கடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இதன்போது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு கொடுக்கப்படும் நிவாரணம் எவ்வளவு, அவர்களுக்கு நஷ்ட ஈடு தொகை எப்போது எவ்வளவு வழங்கப்படும், உண்மையில் கப்பலினால் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக என சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்,
இதற்கு பதில் தெரிவித்த ரோஹித்த அபேகுணவர்தன கப்பல் விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, விசாரணைகள் முடிவடைந்த பின்னரே முழுமையான தகவல்களை முன்வைக்க முடியுமென கூறியதுடன் வனஜீவராசிகள் திணைக்களம் இணைந்து ஆய்வுகளை முன்னெடுத்தலில் இறுதியாக அவர்கள் வழங்கிய அறிக்கையில் 177 ஆமைகளும், 4 திமிகலங்களும், 20 டால்பின்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது,