யாழ். நல்லூர் திருவிழாவில் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த பாடகி நித்யாஶ்ரீ மகாதேவன்
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற கர்நாடக இசைக் கச்சேரியில் தென்னிந்திய பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ கலந்து கொண்டு தன் குரலால் பார்வையாளர்களை மெய்மறக்க செய்துள்ளார்.
குறித்த இசைக்கச்சேரிஇந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய நிதியில் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்று (19) சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பாடகி டாக்டர் நித்யஶ்ரீ, முருகன் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்களை இசைக் கலைஞர்களின் குழுவுடன் இணைந்து ஆன்மாவை உலுக்கும் வகையில் பாடி, பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார்.
இந்த கச்சேரி அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றதுடன் அனைவரின் உள்ளங்களிலும் ஆழமான பக்தி உணர்வை எழுப்பியது.