அனிதாவை தொடர்ந்து களமிறக்கப்பட்டுள்ள அடுத்த செய்தி வாசிப்பாளர்! கொண்டாடும் பிக்பாஸ் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியில் வரும் அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி பிக் பாஸ் சீசன் 5 துவங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக 20 போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பதாகவும், அதில் இதுவரை 16 போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
அந்த வகையில் தற்போது போட்டியாளர்களை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களை ஒருவாரம் மட்டும் தனிமையில் வைத்திருக்க பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்ட ஒரு சில பிரபலங்கள் சேர்ந்து இருக்கும் குரூப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தில் ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி ஆகியோர் இருந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாக தான் இருப்பார்கள் என்று உறுதி செய்துள்ளனர்.
எனினும் அவர்களில் கண்மணியை தவிர மற்றவர்கள் அனைவரும் பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது சன் டிவியின் பிரபல செய்தி வாசிப்பாளரான கண்மணி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதை அறிந்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஏனெனில் கடந்த சீசனில் சன் டிவியின் செய்தி வாசிப்பாளரான அனிதா சென்று வந்துள்ள நிலையில், அவருக்கு திரைத்துறையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தற்போது கண்மணியும் பிக்பாஸ் சீசன் 5ல் செல்ல உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறான நிலையில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றிய முழு விவரமும் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.