திருமுறுகண்டியில் புதிதாக கொரோனா சிகிச்சை நிலையம்
கிளிநொச்சி திருமுறுகண்டி பகுதியில் 350 கட்டில்களுடன் புதிதாக கொரோனா சிகிச்சை நிலையம் இன்று முதல் தயார்ப்படுத்தப்படடுள்ளது. ஏற்கனவே வட மாகாணத்திற்கான தொற்று நோய் மருத்துவமனையாக கிருஸ்ணபுரம் வைத்தியசாலை செயற்பட்டு வந்தது.
அதற்கு மேலதிகமாக மலையாளபுரம் கிராமத்தில் இராணுவ வைத்தியசாலையாக இருந்து வந்த நிலையம் கடந்த 5 ஆம் திகதி முதல் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந் நிலையில் தற்போது கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள திருமுறுகண்டி பகுதி இராணுவ முகாம் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக இன்றிலிருந்து மாற்றப்படுகிறது.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தை கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன், கிளிநொச்சி
மாவட்டத்தில் 06 கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்தார்.