சுவிஸில் அறவிக்கப்பட்ட புதிய கொரோனா நடைமுறைகள்!
சுவிஸ் நாட்டில் இன்றைய தினம் (19-01-2022) புதன்கிழமை புதிய கொரோனா நடைமுறைகள் அறவிக்கப்பட்டது.
நிகழ்வுகளில் 2G நடைமுறையுடன் முகக்கவசம் , அத்துடன் கட்டாயம் இருக்கையில் இருக்க வேண்டும்.
தற்போது 3G, அதாவது தடுப்பூசி இட்டோர், நோயில் குணம் அடைந்தோர் மற்றும் கொரோனா சோதனை செய்தோர் உள்நுழையலாம் எனும் விதிகள் கடைப்பிடிக்கப்படும் உள்ளரங்குகளில், மகுடநுண்ணித் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் நோய்த் தொற்றிற்கு ஆட்பட்டு குணம் அடைந்தோர்கள் முகக்கவத்துடன் உள்ளரங்குகளில் நுழையலாம் என அறிவிக்கப்படுகின்றது.
உணவகங்கள், பண்பாட்டு மற்றும் விளையாட்டு நிலையங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் பொருந்தும். மேலும் எங்காயினும் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
உணவு உட்கொள்வதானால் கட்டாயம் இருக்கையில் இருந்தபடி மட்டுமே உண்ணலாம். எழுந்தவுடன் முகக்கவசம் அணியவேண்டும்.
2G+ நடனவிடுதியிலும் மற்றும் முகக்கவசம் அணயமுடியாத இடங்களிலும் எங்காவது முகக்கவசம் அணியமுடியாது என்றால் அல்லது இருந்து உணவு உண்ணமுடியாது என்றால் இவ்விடங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும், நோயில் இருந்து குணம் அடைந்தவர்களும் மட்டும், கொரோனா பரிசோதனை செய்து, நோய்த்தொற்று இல்லை என்னும் சான்றுடன் உள்நுழையலாம்.
இவ்விதி நடனவிடுதிகள், மதுநிலையங்கள், முகவுறை அணியாக தொழிலற்ற விiளாயாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் இவ்விதி பொருந்தும். ஊதும் இசைக்கருவிகைளக் கையாளும் இசைப்பயிற்சிக்கும் இது பொருந்தும்.
கடந்த நான்கு மாதத்திற்குள் இரு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டோர்களுக்கும் அதுபோல் கடந்த 4 மாதத்திற்குள் நோயில் இருந்து முழுமையாக குணம் அடைந்தோருக்கும் இந்நோய்த்தொற்று சான்றில் இருந்துவிடுப்பு அளிக்கப்படுகின்றது.
நிகழ்வுகளில் அல்லது உணவகங்களில் 2G விதியுடன் மேலதிகமாக நோய்தொற்று பரிசோதனைச் சான்றும் நடைமுறையில் இருப்பின் இருக்கையில் இருக்க வேண்டும் எனும் விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
தனியார் நிகழ்வுகள் வீட்டில் உள்ளவர்களில் எவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு குணம் அடையவில்லை என்றாலும் அல்லது உரிய கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் ஆகக்கூடியது 10 ஆட்களே வீடுகளில் ஒன்றுகூடலாம்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் நோயிலிருந்து குணமடைந்தோர் உரிய சான்றுடன் தனியார் நிகழ்வுகளில் ஆகக்கூடியது 30 ஆட்கள் ஒன்றுகூடலாம்.
உள்ளரங்கில் அல்லது வெளியரங்கில் தனிபட்டு ஒன்றுகூடுவதானால் ஆகக்கூடியது 50 ஆட்கள் கூடலாம்.
வெளியரங்கில் பொதுநிகழ்வு இதன்போது தடுப்பூசி போட்டுக் கொண்டோர், நோயிலிருந்து குணமடைந்தோர் மற்றும் நோய்தொற்றுப் பரிசோதனை செய்தோர் மட்டுமே பங்கெடுக்கலாம்.
இவ்வாறு நடைபெறும் வெளியரங்கு நிகழ்வில் ஆகக்கூடியது 300 ஆட்களே பங்கெடுக்கலாம்.
வீடுகளில் இருந்தபடி பணிகள்
சுவிற்சர்லாந்து நடுவனரசு வீடுகளில் இருந்தபடி கடமைப்பணியாற்றப் பணித்துள்ளது.