கதிர்காம ஆலய நன்கொடையில் புதிய சிறுவர் விடுதி
ருஹுனு மஹா கதிர்காமம் ஆலய பக்தர்களின் நன்கொடையில் மஹரகம வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிறுவர் வோர்ட் வளாகம் இன்று (03) திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை விமானப்படையின் 'ஹுஸ்ம' வேலைத்திட்டத்தின் கீழ், இராணுவ வீரர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்புடன் 10 மாத காலப்பகுதிக்குள் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த வோர்ட் வளாகத்திற்காக செலவிடப்பட்ட தொகை சுமார் 160 மில்லியன் ரூபாவாகும்.
அதன் உபகரணங்களுக்காக மேலும் 50 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நன்மையளிக்கும் வகையில் முழு வசதிகளுடன் கூடிய 4 மாடிகளுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த வளாகம் 70 உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.