தேசிய சைபர் பாதுகாப்பு சட்டம் தொடர்பில் வெளியானத் தகவல்
தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தை இந்த வருடத்திற்குள் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவவுள்ளதாகவும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் டிஜிட்டல் பொருளாதார மாநாட்டை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலத்தில் 4.73 சதவீதமாக காணப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரம் தற்போது 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதனால் பொருளாதாரமும் வலுவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே டிஜிட்டல் பொருளாதார மாநாடு இலங்கையில் நடத்தப்படவுள்ளது.
அதனூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிகளை, வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.