நாரம்மலவில் லொறி சாரதியை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
நாரம்மலவில் சமீபத்தில் லொறி சாரதி ஒருவரை தற்செயலாக சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப இன்ஸ்பெக்டர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, நாரம்மல நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொலிஸ் உப இன்ஸ்பெக்டரை பெப்ரவரி 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
ஜனவரி 18 அன்று, வாகனத் தணிக்கையின் போது சிவில் உடையில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி தனது துப்பாக்கியை ‘தற்செயலாக’ வெளியேற்றியதால் 41 வயது லொறி சாரதி கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மஹரச்சிமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
தம்பெலஸ்ஸ, நாரம்மல பகுதியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்தும் சமிக்ஞைக்கு இணங்க சாரதி தவறியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.