நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை திடீர் இடைநிறுத்தம்!
தமிழகம் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம் - யாழ் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளை (10-10-2023) செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான முதல் முயற்சியாக நேற்று (08-10-2023) ஞாயிற்றுக்கிழமை பரீட்சார்த்த பயணத்தை கப்பல் மேற்கொண்டு, காங்கேசன்துறைக்கு வந்து நாகப்பட்டினம் திரும்பியிருந்தது.
இந்த நிலையில் இன்று (09-10-2023) திங்கட்கிழமை குறித்த கப்பல் சேவை நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெற மாட்டாது எனவும், எதிர்வரும் 12ஆம் திகதியே இடம்பெறும் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.