நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர்
நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரது விசைப்படகில் ரவி, அருள், கண்ணன் உள்ளிட்ட 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நடுக்கடலில் ஏற்பட்ட சூரைக்காற்றால், படகு நிலைகுலைந்து கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஷாஜகான் என்ற மீனவர் மாயமாகி உள்ளார்.
அவரை தேடும் பணியில் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாகவும், இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹோவர்கிராப்ட் உள்ளிட்டவைகள் மூலமாகவும் பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.