முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்திகளை பகிர்ந்த நபர்; மூன்று மணி நேரம் விசாரணை
முள்ளிவாய்க்கால் நினைவேந் தல் நிகழ்வுகள் தொடர்பில் இணையத்தள செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் மூன்று மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
யாப்பாணத்தை சேர்ந்த சேர்ந்த முன்னாள் ஊடகப் பணியாளர் ஒருவரே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 12ஆம் திகதி - வெள்ளிக் கிழமை 145, கிருலப்பனை வீதி, பொல்கேன்ஹொடவில் அமைந்துள்ள பூத்தானை, கெப்பிற்றல் கட்டட 3ஆம் மாடிக்கு அவர் பயங்கரவாத தடுப்பு பொலி ஸாரால் அழைக்கப்பட்டார்.
அங்கு, அவரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை இடம்பெற்றதுடன், அவரிடம், முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வு தொடர்பான இணையத்தள செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமை மற்றும் அவரின் ‘வட்ஸ் அப்’ குழு தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
அத்துடன், அவரின் கைத்தொலைபேசியும் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது, விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களுடன் தொடர்புகளைப் பேணு தல், அவர்கள் தொடர்பான அடையா ளங்களை வைத்திருத் தல் என்பவற்றுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர், கம்பஹா - சீதுவையில் வசிக்கும் அவரின் உறவினர்களிட மும் , இவர் குறித்து விசாரிக்கப் பட்ட நிலையிலேயே கடந்த 12ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
மேலும் குறித்த நபர் கொழும்பில் வெளிவரும் இரு நாளிதழ் களிலும், யாழ்ப்பாணத்தில் வெளியான வார இதழிலும் பணியாற்றியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.