தப்பிச்செல்ல முயன்ற முல்லைத்தீவு இளைஞருக்கு இப்படி ஒரு நிலை!
தமிழகத்தில் இருந்து தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று இரவு மரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு சென்று தங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் விசா முடிந்ததால் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு திரும்புவதற்கு தனுஸ்கோடிக்கு சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் குறித்து அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்ப இடத்திற்கு சென்ற மரைன் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.
கைதானவர் நபர் மரைன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கைதாவ்னவர் கைது செய்யப்பட்ட நபர் முல்லைத்தீவு மல்லாவி பகுதியைச் சேர்ந்த சமிந்தன் (வயது-24) என தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.