தமிழர் பகுதியில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! 6 பேர் காயம்
முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (21-05-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வற்றாப்பளை ஆலய வழிபாட்டுக்காக சென்ற உழவு இயந்திரம் வேககட்டுப்பாடை இழந்த நிலையில் தடம் புரண்டதில் பதினாறு வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 16 வயதான ரவிச்சந்திரன் மிதுசிகன் என்னும் ஊழவனுர் பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் இவருடன் பயணித்த 06 பேர் படுகாயம் அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக புது குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்தே இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.