புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த மற்றுமொரு தமிழ் பாடசாலை! குவியும் பாராட்டுக்கள்
முல்லைத்தீவில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்று புலமைப் பரிசில் பரீட்சையில் நூறு வீத சித்தியடைந்து சாதித்துள்ளது.
முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஐயன்கன்குளம் மகா வித்தியாலம் என்ற தமிழ் பாடசாலையே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
2021-ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஐயன்கன்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 12 பேர் தோன்றியிருந்தனர்.
இந்த நிலையில் வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பரீட்சையில் தோற்றிய நான்கு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதோடு பாடசாலை நூறு வீத சித்தியடைந்து சாதித்துள்ளது.
அந்தவகையில் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில், கு.சயந்தன் 166, யோ.டினுசிகா 163, ர.பவிசனா 162, இ.ஜெயஹர்சினி 152 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவுயில் வெட்டுப்புள்ளி 147 ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு சாதிக்க காரணமான அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களை ஐயன்குளம் கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.