தமிழர் பகுதியில் மகனின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியில் தாய்க்கு நேர்ந்த சோகம்!
கிளிநொச்சியில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்றைய தினம் (02-03-2023) உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (01-03-2023) இடம்பெற்றுள்ளது.
இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
மகன் உயிரிழந்த செய்தியை இன்றைய தினம் (03-03-2023) அறிந்த குறித்த குடும்பத்தரின் தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பிரதேச மக்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.