இலங்கைக்கு மேலும் கால அவகாசம்!
இலங்கை தன்னிடம் பெற்ற கடன்களை மீள திருப்பி செலுத்துவதற்கு 12வருடகால அவகாசத்தை வழங்ககூடும் என இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்காக இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள்
சர்வதேச நாணயநிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன அதன் பின்னர் மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் வெளியாகும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எங்கள் பணத்தை மீட்டெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மூன்று நான்கு வருடங்களில் கொடுத்த பணத்தை பெறவேண்டும் என தெரிவித்த அவர், ஆனால் அதனை 10-12 வருடங்களிற்கு நீடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.