காதலியின் நிர்வாண புகைப்படங்களை கசியவிட்ட பிக்குவிற்கு நேர்ந்த கதி
முன்னாள் காதலியான திருமணமான பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை, இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட பௌத்த துறவிக்கு இலகு வேலையுடன் கூறிய ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு துறவிக்கே, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, இன்று (12) இந்த தண்டனையை விதித்தார்.
பெண்ணின் கணவருக்கு ஆபாச வீடியோ
அதோடு பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 2,500 அபராதமும் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்குமாறும் நீதவான் தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அபராதம் செலுத்தப்படாவிட்டால், அவர் மேலும் மூன்று மாத சிறைத்தண்டனையை கடுமையாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு அவர் இந்த தண்டனையை விதித்தார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்த பின்னர் நீதிபதி இந்த தண்டனையை விதித்தார்.
பிக்குவிற்கும் பெண்னுற்கும் இடையே ஒரு காதல் உறவு இருந்ததாகவும், அவ்வப்போது வீடு மற்றும் ஹோட்டல்களில் தங்கிருந்துள்ளனர்.
மேலும் இருவரும் பிரிந்த பிறகு, தனது கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்புடைய வீடியோக்களை அனுப்பியதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.