திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்?

Hindustan Horoscope Hinduism
By Sahana Sep 30, 2024 12:23 AM GMT
Sahana

Sahana

Report

சிவனின் அருளை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் மன உறுதியுடன், வரும் தடைகளை தாண்டி விடாப்பிடியாக முறையாக வழிபாடு செய்தால் சிவனின் அருளை பெற முடியும்.

சிவனை முறையாக வழிபடுவதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும். தீய கர்மாக்களில் இருந்து விடுபட சிவனை வழிபடுவதே ஒரே வழி. சிவ பெருமானை ஒரு சில குறிப்பிட்ட முறைகளில் வழிபட்டால் அவரின் அருளை எளிதில் பெற முடியும்.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipadu

சிவ வழிபாட்டில் ஈடுபடும் போது சிவனின் அருள் மட்டுமின்றி நமக்குள் சிவத்தை உணரும் தன்மை, ஆன்ம பலம் போன்ற பலவிதமான நன்மைகளை நம்மால் பெற முடியும்.

தெய்வங்கள் அனைத்திற்கும் தலைவனாக விளங்கக் கூடியவர் சிவ பெருமான் என இந்து புராணங்கள் சொல்கின்றன. அதனாலேயே சிவனுக்கு மகாதேவன் என்ற திருநாமம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதே போல் உலக உயிர்கள் உற்பத்தியாவதும், ஒடுங்குவதும் சிவனுக்குள் தான் என சொல்லப்படுகிறது. ஆதியும் அந்தமும் இல்லாதவர், அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என சிவ பெருமானை வேதங்கள் போற்றுகின்றன.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipadu

சிவனின் அருள் இருந்தால் பிறப்பு-இறப்பு இல்லாத முக்தி நிலையை அடைய முடியும் என்கிறார்கள். சிவனின் அருளை பெறுவதற்கு முனிவர்களும், ரிஷிகளும் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்ததாக சொல்லகிறார்கள்.

ஆனால் தற்போதைய காலத்தில் அப்படி தவம் இருப்பது சாத்தியம் இல்லாதது. அப்படியானால் சிவனின் அருளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என பலரும் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் சில எளிமையான விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தாலே சிவனின் அருளை பெற்று விடலாம் என சொல்லப்படுகிறது.

பக்தி செய்வதும், முழுவதுமாக சரணாகதி அடைவதுமே சிவனின் அருளை பெறுவதற்கு மிகச் சிறந்த வழியாகும். சிவனின் மந்திரங்களை, குறிப்பாக பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நம சிவாய" மந்திரத்தை தினமும் உச்சரிப்பது சிவனின் அருளை பெற உதவும்.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipadu

சிவ பெருமானின் திருநாமங்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதால் சிவ குணங்கள் நமக்குள் வர துவங்கும். சிவத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும் போது சிவனின் அருளும் முழுவதுமாக கிடைக்கும்.

சிவ வழிபாடு செய்வதும், சிவனின் லிங்க ரூபத்திற்கு தொடர்ந்து பூஜை செய்வதும் ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும். லிங்கத்திற்கு பால், தயிர், தேன், தண்ணீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது, மலர்கள் படைத்து, பூஜை செய்வது ஆகியன சிவனின் மனதை குளிர செய்யும்.

சிவலிங்கம் என்பது சிவனின் அருவுருவமாகும். இதனை அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் சிவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நாம் மாற முடியும்.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipadu

சிவனின் அருளை விரைவாக பெறுவதற்கு மிக சிறந்த வழி ருத்ராபிஷேகம் ஆகும். சிவன் என்றாலே இன்பத்தை வழங்குபவர் என்று பொருள். காதல், திருமணம், மகிழ்ச்சி, செல்வம், சக்தி, ஞானம் போன்றவற்றை வழங்குபவராக சிவ பெருமான்.

எளிதில் மனம் மகிழ்ந்து, பக்தர்களுக்கு அருள் செய்து, அவர்களுக்கு வேண்டிய வரங்களை தரக் கூடியவர் சிவ பெருமான். ருத்ராபிஷேகம் சிவனை மகிழ்விக்க செய்யப்படும் மிக முக்கியமான பூஜையாகும்.

சிவனுக்கு விருப்பமான, மிக நீண்ட சடங்கும் ருத்ராபிஷேகம் தான். ருத்ராபிஷேகம் செய்வதும், அந்த யாகத்தில் கலந்து கொள்வது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வழியை அருளக் கூடியதாகும்.

சிவனை அபிஷேக பிரியர் என்பார்கள். பலவிதமான பொருட்களால் அவருக்கு அபிஷேகம் செய்து, அவரை குளிர்ப்பது அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipadu

பால், தேன், மஞ்சள், சுத்தமான தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்வதும், வில்வத்தால் அர்ச்சிப்பதும் சிவனின் அருளை பெற்றுத் தரக் கூடியதாகும். கங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்து மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ருத்ராட்சம் சிவனின் அம்சமாக கருதப்படுவதாகும். இதை அணிவதால் அளவில்லாத பலன்களை பெற முடியும். ருத்ராட்சம் மனித குலத்திற்கு ஈசன் அளித்த அருட்கொடையாகவே கருதப்படுகிறது. ருத்ரன், அக்ஷம் என்ற சமஸ்கிருத சொற்களின் இணைவே ருத்ராட்சம் ஆகும்.

சிவனின் கண்ணீரில் இருந்து தோன்றி ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சிவனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். சரியான முறைகளை பின்பற்றி ருத்ராட்சத்தை அணியும் போது அதன் பலன்கள் பல மடங்காக அதிகரிக்கும்.

திங்கட்கிழமை எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெறலாம்? | Monday Sivan Arul Pera Eliya Valipadu

மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, புளியங்கூடல், வண்ணார்பண்ணை

11 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US