எம் கே சிவாஜிலிங்கம் நீக்கம்; உறுதிப்படுத்திய கட்சி!
யாழ் ஊடக அமையத்தில் இன்று (08.08.2023) ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் எம் .கே சிவாஜிலிங்கம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதனை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான, கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை கோரியிருந்தார்.
இந்நிலையில் கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கூறப்பட்டிருந்தது.
இதன்காரணமாக கடந்த (06.08.2023) ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவி விலகுவதாக அறிவித்தார் என சு.நிசாந்தன் தெரிவித்தார் .