அமைச்சர் நாமலுக்கு மேலுமொரு பொறுப்பு! விமல் வெளியிட்ட தகவல்
சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு (Basil Rajapaksa) வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
இதனை அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
மேலும், 2015 ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தின் மீது குடும்ப ஆட்சி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட அதிகளவில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
2015 இல் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களே பதவி வகித்தனர் தற்போது அதனை விட அதிகமானவர்கள் பதவி வகிக்கின்றனர்.
அமைச்சரவையை எத்தனை முறை மாற்றினாலும் நாமல் ராஜபக்சவிற்கு ஏதாவது பதவியை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.