வட் வரி தொடர்பில் பகிரங்க அழைப்பு விடுத்த நிதி இராஜாங்க அமைச்சர்!
நாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றையதினம் (01-01-2024) முதல்அதிகரிக்கப்பட்டுள்ள வட் வரி (பெறுமதி சேர் வரி) தொடர்பில் விரிவான கலந்துரையாடலை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட் வரி என்பது ஒரு சிக்கலான தலைப்பாகும், இருப்பினும் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட மக்களுக்கு விளக்க வேண்டும்.
வட் வரி தொடர்பான அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களையும் எதிர்வரும் வியாழனுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வட் வரி விதித்த பின்னர் அனைத்து நுகர்வுப் பொருட்களிலும் சிறிதளவு அதிகரிப்பு இருக்கும், ஆனால் சில பொருட்களுக்கு வட் வரி சேர்க்கப்படவில்லை என்பது மிகத் தெளிவாக உள்ளது.
இருப்பினும், அதற்கு சிலர் தவறான விளக்கங்களை அளித்துள்ளனர் என்று நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.