கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்
கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக வளாகத்திற்கு அருகில் வீதியில் பயணித்த கார் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததால் காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் மரங்கள் முறிந்து விழுவதால் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மறு அறிவித்தல்வரை கடலுக்கு செல்லவேண்டாம்
அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக மறுஅறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலில் ஈடுபடுபவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை காரணமாக நிலவும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்தான கடல் நிலைமைகள் குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது