யாழில் கஞ்சா கலந்த மாவா போதை பொருள் விற்ற நபர் அதிரடி கைது!
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு ஜிபிஎஸ் மைதான வீதி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த உடுவில் பகுதியைச் சேர்ந்த 45வயதுடைய ஒருவர் இன்றைய தினம் யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்டபொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து மூன்று கிலோ நூறு கிராம் கஞ்சா கலந்த மாவா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு குறித்த கஞ்சா போதை பொருளை வாங்குவதற்கு வந்த பாற்பண்ணை கல்வியங்காடு பகுதியை சேர்ந்த இருவர்கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது, செய்யப்பட்ட கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் வியாபாரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது தான் நீண்ட காலமாக யாழ்ப்பாண புறநகர் பகுதிகளில் ஒவ்வொரு இடங்களிலும் கொண்டு சென்று மாவா போதை பொருளினை விற்பதாகவும்
தனக்கு நல்ல வருமானம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மிகவும் சூட்சமமான முறையில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்
கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.