கொழும்பில் ஐந்து வீடுகளில் பாரிய தீ; விரந்த தீயணைப்பு வண்டிகள்!
கொழும்பு பொரளை கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளதாக கொழும்பு ந்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இதனையடுத்து, குறித்த பகுதியில் தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தெரியவராத நிலையில் பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்