யாழில் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று (17) காலை முக மூடி கொள்ளையன் உட்புகுந்து உள்ளனர்.
இவர்கள் வீட்டின் கதவை திறந்து விட மேலும் நான்கு முகமூடி கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து வீட்டாரை கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்து 20 பவ்ன் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் இளவாலை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத் தோடு போலிஸார் வீட்டார் கொடுத்த முக மூடி கொள்ளையர்களின் அங்க அடையாளங்களின் அடிப்படையில் 20,21 வயதான இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் போதை பொருளுக்கு அடிமையாளர்கள் எனவும் மேலதிக விசாரணைகளை அவர்களிடம் முன் எடுத்து செல்வதாகவும் இளவாலை போலிஸார் தெரிவித்துள்ளனர்.