கொழும்பில் திரண்டுள்ள ஏராளமான பிக்குகள்! (Video)
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பிக்குகளினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பிக்குகளினால் ஸ்ரீ போதிராஜா மாவத்தையின் முன்பாக தற்போது இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே, சிறிதர்ம தேரர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் நாட்டில் அத்தியாவசிய தேவைகளின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளமைக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பிக்குகள் கலந்து கொண்டு பதாதைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.