மணத்தக்காளி கீரையின் மருத்துவ மகிமை ; நீரிழிவு நோயாளிகள் முதல் கருப்பை ஆரோக்கியம் வரை தீர்வு
நவீன உணவு கலாச்சாரத்திற்கு மத்தியில், தெருக்களில் எளிதாக கிடைக்கும் மணத்தக்காளி கீரை ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும்.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் 'காட்டுக்கீரை' என்று அழைக்கப்படும் இது, செரிமான மண்டலத்தைச் சீரமைப்பதில் முதன்மை வகிக்கிறது.

தாதுக்கள் பற்றாக்குறை
இந்த கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் A, C, E மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு, கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
சத்துக்கள் நிறைந்த இந்த கீரையைச் சிறுபருப்பு அல்லது பயத்தம்பருப்புடன் சேர்த்து மசியலாக சமைத்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியையும் வலுவையும் தரும்.
தாதுக்கள் பற்றாக்குறையை நீக்கி ஆரோக்கியமான வாழ்வை தரக்கூடிய இந்த நாட்டுக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது நலம் பயக்கும்.