யாழில் பெரும் பரபரப்பு சம்பவம்: கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்!
யாழ்ப்பாணத்தில் 51வயதுடைய ஆண் ஒருவர் இன்றையதினம் (24-09-2023) காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் யாழ் மயிலங்காடு, ஏழாலை பகுதியில் வசித்து வந்த ஆறுமுகம் துரைராசாவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்றையதினம் (23-09-2023) வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில் வீட்டிற்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவரை தேடிச் சென்றபோது, இன்று காலை தோட்டக் கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
அவர் மது போதையில் தவறி கிணற்றினுள் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.