மனைவியை பிரிந்து வாழ்ந்த நபர் மர்ம மரணம் ; கொலையென சந்தேகிக்கும் பொலிஸார்
அநுராதபுரத்தில் தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெஹிஎல்லேவ வீதிக்கு அருகில் உள்ள வயலில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அநுராதபுரம், தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
சந்தேகத்தில் பொலிஸார்
இவர் 15 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை விட்டு பிரிந்து கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள தனது சகோதரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் இவர் மீண்டும் கொழும்பு பிரதேசத்திற்கு செல்வதற்காக கடந்த மே மாதம் 31 ஆம் திகதி தனது சகோதரனின் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது கொலையா என்பது தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.