முச்சக்கர வண்டிக்குள் மர்மமான முறையில் பலியான நபர்
வெள்ளவத்தை பகுதியில் மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் வெள்ளவத்தை, வேலவனாராம வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்குள் மயக்க நிலையில் 41 வயதுடைய நபரொருவர் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (07) பிற்பகல் நிகழ்ந்துள்ளதாகவும், முச்சக்கர வண்டியில் மயக்க நிலையில் கண்ட அந்த நபரை குறித்த பகுதியிலுள்ள மக்கள் வெள்ளவத்தை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெள்ளவத்தையில் உள்ள வேலவனாராம வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீது இன்று (08) நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.