பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: திருகோணமலையில் வசமாக சிக்கிய நபர்
திருகோணமலை - விஜிதபுர பகுதியில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (09-08-2023) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் சூழ்ச்சிகரமான முறையில் விற்பனை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு குற்ற செயல்களுடன் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.