பேருந்தில் ஐஸுடன் சென்றவர் கைது
தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் (09) அன்று இரண்டு மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள், பேருந்து பொகவந்தலாவ நகருக்கு வந்ததன் பின் சோதனையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதோடு சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.