நாளைய தினம் இலங்கை வரவுள்ள வெளிநாடொன்றின் முக்கியஸ்தர்!
இலங்கைக்கு நாளையதினம் (07-10-2023) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு மலேசிய வெளிவிவகார அமைச்சர் சம்ப்ரி அப்துல் காதிர் Zambry Abdul Kadir வருகை தரவுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேலும், எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் சம்ப்ரி அப்துல் காதிர் கலந்துகொள்ளவுள்ளார்.
மலேசிய வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
நாளைய தினம் வருகை தரவுள்ள மலேசிய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான இராஜதந்திரிகள் குழாம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்களெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.