மழைக்கால நோயை குறைத்து ஆரோக்கியத்திற்கு உதவும் காய்கறிகள்
தற்போது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில், மழைக் காலத்தில் எளிதில் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பதால் மழைக்காலத்தில் எந்தெந்த காய்ககளை உங்களின் நாளாந்த உணவுப்பட்டியலில் சேர்த்து கொள்ள வேண்டும் என்பதை நாம் இங்கு பார்க்கலாம்
சுரைக்காய்
சிலருக்கு சுரைக்காயை பார்த்தாலே பிடிக்காது, அதன் சுவையை விரும்பாமல் முகம் சுளிப்பார்கள். ஆனால் சுரைக்காயை மழைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தாது. வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து நிறைந்த இந்த காய் மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
பாகற்காய்
கசப்பு சுவை கொண்டதாக கருதப்படும் பாகற்காய் பலருக்கும் பிடிக்காது தான். ஆனால் இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நம் உடலை தொற்று நோயிலிருந்து சிறப்பாக பாதுகாக்கும் திறன் கொண்டவை. மேலும் இந்த காயில் இரும்புச் சத்து இருப்பதால், இதனை அடிக்கடி டயட்டில் சேர்த்து கொள்வதால் உடலில் ரத்த பற்றாக்குறை ஏற்படாது மற்றும் ரத்தத்தையும் சுத்தப்படுத்துகிறது.
வெண்டைக்காய்
மழைக்காலத்தில் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டிய காய்களில் ஒன்று வெண்டைக்காய. இந்த காய்கறி ஆண்டின் அனைத்து மாதங்களிலும் கிடைக்கும் என்றாலும், மழைக்காலத்தில் இதை அதிகம் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். உங்களிலு ஹை-கொலஸ்ட்ரால் இருந்தால் இந்த காய்கறியை சாப்பிடலாம். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் எலும்புகளை வலுவாக்கும்.
பீர்க்கங்காய்
பீர்க்கங்காய் அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் ரத்தப் பற்றாக்குறை ஏற்படாது. இந்த காயில் நார்ச்சத்து, வைட்டமின்ஸ், நீர் போன்றவை அதிகம். நார்ச்சத்து நிறைந்த இந்த காய்கறி நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது.தொற்று பிரச்சனைகளை தவிர்க்க இந்த காயை டயட்டில் அடிக்கடி சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
தக்காளி
நம்முடைய சமையலில் தினசரி நிச்சயமாக பயன்படுத்தப்படும் காயாக இருக்கிறது தக்காளி. உண்மையில் தக்காளி இல்லாமல் பல உணவுகள் சுவையாக இருக்காது. குறிப்பாக மழைக்காலத்தில் தக்காளியை அதிகம் சாப்பிடுங்கள். இதில் இருக்கும் வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்க செய்கிறது. சாலட், சூப், காய்கறிகளோடு சேர்த்து , ஜூஸ் என பல வடிவங்களில் எடுத்து கொள்ளலாம். தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது, இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் புற்றுநோயை தடுக்கிறது.
பர்வல்
பார்ப்பதற்கு கோவைக்காயை ஒத்தது போல இருக்கும் பர்வல் காயை மழைக்கால டயட்டில் சேர்த்து கொள்வதால் இந்த சீசனில் ஏற்படும் சளி, இருமல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை தவிர்த்து கொள்ளலாம். இந்த காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது, எனவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.