யாழின் ஆரியகுளத்தை புனித பிரேதேசமாக்குங்கள்
யாழின் ஆரியகுளத்தை புனித பிரேதேசமாக மாற்றுமாறு யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.
யாழின் ஆரியகுளத்தில் பெளத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தி தொடர்பில் ஸ்ரீ விமல தேரர் கூறியதாவது , நான் யாளனாத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில் ஆரிய குலா அபிவிருத்தி தொடர்பாகவும் அதில் புத்த விகாரை அமையவுள்ளதாகும் செய்திகள் வெளியாகின ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. நாக விகாரைக்கு அண்மையில் சுற்றுலா மையத்தினை அமைப்பது தொடர்பில் எனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றேன். குறித்த அபிவிருத்தி தொடர்பில் எம்முடன் கலந்தாலோசிக்கபடவில்லை.
குளத்தின் நடுவே உணவு விடுதி அமைப்பதை தவிர்த்துவிட்டு அங்கு இந்து மற்றும் ஏனைய மதத்தவர்களை ஒன்றிணைக்கும் நல்லிணக்க மண்டபத்தை நிறுவ கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் அடந்த கூற்றை பத்திரிகைகள் புத்தர் சிலை அமைக்க போகின்றோம் என செய்தியாக வெளியிட்டிருந்தனர். அனால் அதில் எந்த உண்மையும் இல்லை.மாறாக அதனை ஒரு தியான மண்டபமாக மாற்ற யோசித்துள்ளோம். இது புனித பூமி என்பதால் குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைப்பது அணைத்து மதத்தினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்து மதமும் பௌத்த மதமும் சர்வமத குழுவாக இணைந்து யாழில் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றோம். விசேடமாக ஆரியகுளம் பகுதியில் அண்மையில் சைவ ஆலயம் உள்ளது. அதேபோல் அண்மையில் பௌத்த விகாரையும் உள்ளது. இந்து மக்கள் வேறு மத மக்கள் என்று பார்க்காது அனைவரும் இணைந்து செயற்படுகின்றோம். நாக விகாரையின் நுழைவாயிலிருந்து பார்த்தால் இந்து மாதத்தின் விசேட தெய்வங்கள் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.
நாம் கூறுவது என்னவென்றால் இந்த பகுதியை ஒரு புனித பிரேதேசமாக மாற்ற வேண்டும். விகாரையுடன் சம்மந்தப்பட்ட குளம் என்பதால் எம்மோடு கலந்தாலோசித்திருக்கலாம். இது குறித்து மாநகர முதல்வரிடம் இது குறித்து கேட்டபோது தற்போது கொரோனா சூழல் நிலவி வருவதால் தான் யாருடனும் கலந்துரையாடவில்லை என தெரிவித்தார். தாற்போது நான் கூறுவது என்னவென்றால் சுற்றுலா மையமாக இந்த பகுதியினை மாற்றினால் இது புனித பூமியாக இருக்காது. எனவே இங்கு இந்து பெளத்த நல்லிணக்க மண்டபம் அமைக்க நான் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
யாழ்.மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றோம்.
சிலர் தங்களது அரசியல் தேவைக்காக மதவாதத்தை தூண்டி மக்களை குழப்புகின்றனர்.
நாங்கள் நாட்டில் நல்லிணக்கத்தோடு சமாதானமாக வாழ அனைவரும் முயற்சிக்கின்றோம். ஆகையில் அரசியில் தேவைக்காக இடம்பெறும் மத வாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.