ஞாயிறு தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட மைத்திரிபால
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,
இந்த ஈஸ்டர் தாக்குதலானது தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் சோகமான நிகழ்வு என தெரிவித்துள்ளார். மேலும் ஈஸ்டர் தாக்குதல் என்பது மிகவும் சிக்கலான விடயம், அது குறித்து விரைவில் விவாதிக்க வேண்டும். மேலும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்பட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் கத்தோலிக் சமூகத்தின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருப்பதாகவும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அரசு இரசாயன உர இறக்குமதியை நிறுத்திய தீர்மானத்தின்போது எதிர்கால விளைவுகள் குறித்து அரசிற்கு பலமுறை தெரிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.