மகிந்தவின் புதிய அவதாரம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்கிறதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பங்களித்த இளம் தலைமுறையினரால் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும் நாமல் ராஜபக்க்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.