பதவி விலகுகிறார் மஹிந்த ராஜபக்ஷ...வெளியான தகவல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தேசிய ஒருமித்த அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் யோசனைகளைப் பெற நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் இன்று (03) காலை ஐக்கிய மக்கள் சக்தி குழு உறுப்பினர்களை சந்தித்தனர்.
நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, நிமல் லான்சா மற்றும் நளின் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ராஜித சேனாரத்ன, டாக்டர். ஹர்ஷ டி சில்வா, கயந்த கருணாதிலக மற்றும் எரான் விக்கிரமரத்ன.