அதிகரிக்கப்படவுள்ள மஹாபொல புலமைப்பரிசில் : மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
பல்கலைக்கழக அமைப்பின் தரமான மேம்பாட்டிற்காக ஏற்கனவே 135 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், மஹபொல புலமைப்பரிசில் 5,000 ரூபாயிலிருந்து, 7,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான முதல் வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தரம் 5 புலமைப்பரிசில் கொடுப்பனவு 750 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாகவும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்த கொடுப்பனவுகள் ஏப்ரல் முதல் வழங்கப்படவுள்ளன.
2019 ஆம் ஆண்டு முதல் மேம்படுத்தப்படாத பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், அனைவருக்கும் கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 1,000 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.