அனைத்து வகை உணவுப் பொதியிடும் பொலிதீன் தாள்கள் தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சர் உத்தரவு
அனைத்து வகையான லன்ச் ஷீட்களையும் (உணவுப் பொதியிடும் பொலிதீன் தாள்கள்) தடை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொளளுமாறு சுற்றாடல் துறை அமைச்சு அதிகாரிகளுக்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டில் சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்தபோது, லன்ச் ஷீட்களை தடை செய்வற்கு நடவக்கை மேற்கொண்ட போதிலும், அத்தீர்மானம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நாளாந்தம் 10 மில்லியனுக்கும் (ஒரு கோடி) அதிகமான லன்ச் ஷீட்களை; பயன்படுத்த சூழலில் வெளிவிடப்படுவதாக சுற்றாடல் அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லன்ச் ஷீட்கள் 2 அல்லது 3 வருடங்களில் மண்ணில் உக்குகின்ற போதிலும். அவற்றிலிருந்து திரட்டப்படும் நுண் பிளாஸ்திக் துகள்கள் 200 வருடங்களுக்கு மேலாக நீடித்திருக்கும் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
லன்ச் ஷீட்களை தடை செய்வதற்கு ஏற்கெனவே சுற்றாடல் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமலேயே உத்தரவொன்றை விடுக்க முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.