லொறி ஒன்று மோதியதில் நபர் ஒருவருக்குநேர்ந்த சோகம்!
அம்பாறை, திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதி தங்கவேலாயுதபுரம் சந்தியில் நேற்று புதன்கிழமை (1) இரவு 9 மணிக்கு லொறி ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பான தகவல்
மாணிக்கபிள்ளையார் வீதி விநாயகபுரம் 4 ம் பிரிவைச்சேர்ந்த 25 வயதுடைய திருச்செல்வம் கிருஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொத்துவில் பகுதியில் இருந்து திருக்கோவிலை நோக்கி பயணித்த லொறியும், திருக்கோவில் இருந்து தங்கவேலாயுதபுரம் நோக்கி சென்ற மோட்டர்சைக்கிளுமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் லொறி சாராதியை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.