நீண்டகாலமாக பல பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்தவர்கள் தமிழர் பகுதியில் சிக்கினர்
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து 4 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்த்கக்கது.

போதை பழக்கத்திற்கு அடிமை
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்தவரெனவும் இவர் மீது ஏலவே 6 பிடியாணைகள் நிலுவையில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும் சான்றுப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நிதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.