இலங்கையில் வீதி விபத்துகளால் பறிபோகும் உயிர்கள் ; பொலிசார் எடுத்த நடவடிக்கை
இலங்கையில் வீதி விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்ட 'E - Traffic' செயலியில் இந்த ஆண்டு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பின் ஊடாக, பாதசாரிகள், பயணிகள் மற்றும் சாரதிகள் சட்டவிரோத வாகனம் ஓட்டுதல் அல்லது போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டால், அது குறித்து உடனடியாக காவல்துறை தலைமையகத்திற்குத் தகவல் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகளின் எண்ணிக்கை 2,562-உயிரிழப்பு 2,710
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் வீதி விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 322 ஆல் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் 2,287 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியிருந்ததுடன், அவற்றின் மூலம் 2,388 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.
எனினும், 2025 ஆம் ஆண்டில் பாரதூரமான விபத்துகளின் எண்ணிக்கை 2,562 ஆக உயர்ந்ததுடன், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,710 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில்