மக்களை அச்சத்தில் உறைய வைத்த சிறுத்தை ; வேட்டையாடப்படும் செல்லப்பிராணிகள்
லிந்துலை, நாகசேன, ஹில்குல்ற்றி தோட்டத்தில் சிறுத்தையொன்று நடமாடுவதன் காரணமாக அந்தப் பகுதியில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுத்தை தமது வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை வேட்டையாடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தின் எல்லைப் பகுதியையும், காட்டுப்பகுதியையும் பிரித்து வேலியடைத்துள்ள போதிலும் அந்த வேலிகளை உடைத்துக் கொண்டு சிறுத்தை வீடுகளுக்கு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சிறுத்தையால் தமது உயிருக்கும், தமது பிள்ளைகளின் உயிருக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அந்தத் தோட்டத்து மக்கள் அதிகாரமிக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.