நோர்வேவில் தலைமறைவான இலங்கையர்கள்
உலக மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்ட மல்யுத்த வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 44 பேர் தலைமறைவாகியுள்ளதாக இலங்கை மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்தின் தலைவர் சரத் ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டிருந்த குழுவே போட்டிகள் நிறைவடைந்த பின்னர் தலைமறைவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை 72 உலக நாடுகளின் பங்குபற்றலுடன் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற உலக மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டனர்.
இதேவேளை தலைமறைவான பல வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தற்போது இலங்கை திருப்பியுள்ள நிலையில் மல்யுத்த அணியின் முகாமையாளர் குடாதந்திரிகே டொனால்ட் இந்திரவன்ஸ, மீண்டும் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் என சரத் ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார்.